முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி -  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் வரும் 4-ம் தேதி மும்பையில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். வரும் 8-ம் தேதி ஆஷ்காபட்டில் நடைபெறும் ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தானுடனும், 13-ம் தேதி மஸ்கட்டில் நடைபெறும் ஆட்டத்தில் ஓமனுடனும் மோதுகிறது இந்தியா. 

அணி விவரம்: கோல் கீப்பர்கள் - சுப்ரதா பால், கரன்ஜித் சிங், குருபிரீத் சிங் சாந்து.  பின்களம் - அர்னாப் மான்டல், சந்தேஷ் ஜிங்கான், அய்பர்லேங் கோங்ஜீ, தனசந்திர சிங், லால்சுவான்மாவியா, நாராயணன் தாஸ், ரினோ ஆண்டோ, பிரிதாம் கோதல்.  நடுகளம் - ஈயூஜென்சன் லிங்டோ, கெவின் லோபோ, சேஹ்னாஜ் சிங், ஜாக்கிசந்த் சிங், பிரணாய் ஹால்டர், பிரான்சிஸ் பெர்னாண்டஸ், ரவ்லின் போர்ஜெஸ், பிகாஷ் ஜெய்ரு.  முன்களம் - ஜேஜே லால்பெக்குலா, ராபின் சிங், சுனில் சேத்ரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்