முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கவுன்சிலர் குரு படுகொலை: ஜெயலலிதா இரங்கல்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் நகர அண்ணா தொழிற்சங்க செயலாளரும், சென்னை மாநகராட்சி 86-வது வார்டு மாமன்ற உறுப்பினரான, அன்புச் சகோதரர் எம்.குரு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இந்தப்படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப கால கட்சி தொண்டரான குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்