முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அறிவித்த ‘இல்லந் தோறும் இணையம்’ கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பதிவு

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த ‘இல்லந் தோறும் இணையம்’ என்ற இணைய வழி தொலைக்காட்சி சேவையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தோடு இணைந்து செயல்பட விரும்பும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடுஅரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசுகேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிர் அளித்து, அதன் ஒளிபரப்பு சேவையை தமிழகத்தில் சென்னையை தவிர பிறமாவட் டங்களில் 02.09.2011 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.2012 அன்றும் துவக்கி வைத்தார்.குறைந்த கட்டணத்தில் நிறைவானகேபிள்டிவிசேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.முதலமைச்சர் 14.09.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ‘இல்லந்தோறும் இணையம்’என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்துஇல்லங்களுக்கும் குறைந்த செலவில்தரமான இணையஇணைப்புகளைவழங்கிடும் என்றும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள்ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும் (Internet Protocol Television-IPTV) ) வழங்கப்படும் என்று அறிவித்தார்.முதலமைச்சர் அறிவித்த இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுத்தும். தமிழ்நாடு முழுவதும்அகண்டஅலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றை வழங்கு வதற்கான உரிமத்தினை (ISP Licence) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக,தமிழ்நாடுஅரசுகேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த விரும்பும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது விருப்பத்தினை இந்நிறுவனத்தின் வலைதளத்தில்(www.tactv.in) உள்நுழைவு (Log-in) செய்து, இணையதள சேவைகள் 'Internet Services' ’ என்ற தலைப்பின் கீழ்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. இப்பதிவினை 05.10.2015 அன்று காலை 10.00 மணிமுதல் 20.10.2015 அன்றுமாலை 5.00 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்