முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காந்தி சிலை–காமராஜ் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.அதே போல் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்கள்.குமரிஅனந்தன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், கோபண்ணா, தணிகாசலம், செல்வம், மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், ராயபுரம் மனோ, கவுன்சிலர் தமிழ்செல்வன், தி.நகர் ஸ்ரீராம், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் சேவாதளம் சார்பில் மாநில துணைத்தலைவர் எஸ்.எம். குமார் தலைமையில் நுங்கம்பாக்கத்தில் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருள் பெத்தையா, சசிகுமார், ராயப்பேட்டை பாஸ்கர், எஸ். பி.ராஜா, நுங்கை சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது படங்களுக்கு ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கோவிந்தராஜ், டி.பி.பாக்யராஜ், கே.ராஜகுமார், நேரு ரோஜா, செல்வம், பி.எஸ்.ராஜ், ஜோதி, சந்தானம், ஆதம்பிரகாஷ், வி.ரமேஷ், தனசேகர், தனலட்சுமி கோவிந்தராஜ் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கருநாகராஜன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சி.உதயகுமார், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் எம்.எம்.ஆர்.மதன், பி.ஆர்.ஆர்.சுந்தர்.உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.வினர் ஜி.கே.வாசன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.மாநில நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸ், டி.என்.அசோகன், டி.என்.பிரபாகர், சக்திவடிவேல், மகேஸ்வரி, ஜி.ஆர்.வெங்கடேஷ், கத்திப்பாரா ஜனார்த்தனன், சைதை மனோகரன், சுரேஷ்பாபு, ஆர்.எஸ்.முத்து, வில்லிவாக்கம் சுரேஷ், ஏ.எஸ்.ஜார்ஜ், சைதை நாகராஜ், மாவட்ட தலைவர்கள் சவுந்தர்முருகன், இல. பாஸ்கர், பிஜுசாக்கோ, ராஜ்குமார், ஜெ.ராகவன், ஜி.ஆர்.கதிரவன், கொட்டிவாக்கம் முருகன், அடையார் லயன் ராமச்சந்திரன், இராணா அருண்குமார், தி.நகர் கோதண்டன், அனுராதா அபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் காமராஜர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயல் தலைவர் ரவிக்குமார், இணைப் பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன் கலந்து கொண்டனர்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நிர்வாகிகளுடன் வந்து காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்