முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி சிலைக்கு சரத்குமார் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

அண்னல் காந்தியடிகள் அவர்களின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, அவர்கள் தொடர்ந்து பெருந்தலைவர் நினைவிடத்தில் உள்ள காமராஜர் சமாதியில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அமைதிப்பேரணி தலைமையேற்று நடந்து சென்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் அவர்கள் தலைமையில் காந்தி மண்டபத்திலிருந்து புறப்பட்ட அமைதிப்பேரணி காமராஜர் நினைவிடத்தை சென்று அடைந்தது.

தலைவர் அவர்களுடன் துணைத்தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், வர்த்தகரணி செயலாளர் கே.ஜே.நாதன், நிதி ஆலோசகர் டாக்டர் ராஜசேகர், சென்னை மண்டலச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மகளிரணி துணைச் செயலாளர்கள் மா.ரா.ஜெமிலா, எம்.பாகீரதி, வர்த்தகரணி துணைச் செயலாளர் ஜே.பாபு, மாவட்டச் செயலாளர்கள் டி.சி.உதயக்குமார், சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன்,எஸ்.பிரசாத், ஏ.டி.சந்திரபோஸ், சந்தனக்குமார், தொகுதிச் செயலாளர்கள் என்.ஆர்.பி. ஆதித்தன், டி.வினாயகமூர்த்தி, பாலசேகர், வீரராகவன், ரஞ்சன், பொன்வேல், பம்மல் ராஜேஷ், முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்