எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கரூரில் தொற்று நோய் தடுப்பு குறித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு
பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 08.10.2015 மாண்புமிகு நாடாளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப.,அவர்கள் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதன் பாதிப்பு கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் சுற்றுப்புற சூழ்நிலையினால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊரகவளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டங்களில் எளிதாக பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொரு துறையின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் எனவும் பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமெனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கூட தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையிலும் கூட தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுடெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி அதன் மூலம் உயிர் சேதங்கள் அடைந்த நிலையிலும் தமிழகத்தில், எடுக்கப்பட்ட பல்முனை நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இன்னும் சிறப்பாக சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.
டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகரரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு ஈடுபாட்டுடன் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய் பரவாமல் தடுத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘எலிசா’ முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, இரத்த கூறுகள், மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சித்த மருத்துவத்துறையின் சார்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நிலவேம்பு குடிநீருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து தடுப்பு நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வது, அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரை மருந்துக்கள் போதிய அளவில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர்கள், கரூர் அருகிலுள்ள ஒத்தக்கடை கிராமத்தில் நடைபெற்ற வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டனர். தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் நீர்தேங்கும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். தொடர்ந்து கரூர் அரசு பொதுமருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் (குநஎநச றுயசன) சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சுகாதார உறுதிமொழியை மாண்புமிகு அமைச்சர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.தட்சிணாமூர்த்தி, , திண்டுக்கல் ஆட்சித்தலைவர்.டி.என்.ஹரிகரன்,., சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, செ.காமராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.கீதாமணிவண்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.அ.சந்திரநாதன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் மரு.கே.குழந்தைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந