எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சி திட்டங்களால் தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் சிட்டிகளும் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களாக மாறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். தமிழ்நாட்டில் சீர்மிகு நகரங்கள் அமைப்பது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை துவக்கி வைத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–
தமிழ்நாட்டை, இந்திய மாநிலங்களிலேயே, சிறந்த ஆளுகை கொண்ட, முதன்மை மாநிலமாக” திகழச் செய்யும், தொலை நோக்குடன், முதலமைச்சர் ஜெயலலிதாவினால், தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணம்” வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 10 நகரங்களை, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டம் -2023 வலியுறுத்துகிறது.
மாநிலத்திலுள்ள அனைத்து பிற பகுதிகளும், சமச்சீர் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம், பொருளாதார வளர்ச்சி அடைய, இந்நகரங்கள் ஒரு முன் மாதிரியாக அமைந்திடவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும், தொடர்ந்து வழங்குதலை உறுதி செய்திடவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின், தொலைநோக்குத் திட்டம்- 2023, வழிவகை செய்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்திய நாடே வியக்கும் வகையில் நடத்தி, 2,42,160 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்து மகத்தான சாதனை படைத்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரும் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குறுகிய காலத்தில் உலகத்தரத்திலான சாலைகளை அமைத்து சாதனை படைத்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, நகர்ப்புரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாபெரும் புதிய நிதி திட்டங்களை, செயல்படுத்தி வருகிறார். சென்னை மற்றும் அதனைச் சார்ந்த புற நகர் பகுதிகளுக்காக, சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களின் வாயிலாக, குடிநீர் வழங்கல், சாலைகள், கழிவு நீர் வடிகால் மற்றும் சுகாதாரப் பணிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிலையங்கள் மேம்பாடு, வாகனங்கள் நிறுத்துமிடம், ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள், நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த நான்காண்டுகளில், சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 3000 கோடி ரூபாயும், நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவின், சீரிய சிந்தனையில் உருவான இத்திட்டத்தைப் பின்பற்றி, மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் ஆகிய இரு நகர்புர வளர்ச்சித் திட்டங்களை, இந்தியா முழுமையும் செயல்படுத்துகிறது. இத்திட்டம், பிரதமரால், 25.6.2015 அன்று துவங்கப்பட்டு, இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்படி, மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த நகரங்களை, மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, அனைத்து வசதிகளுடன் நிர்மானிப்பதை, குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில் மொத்தம் 100 சீர்மிகு நகரங்களை, 5 ஆண்டுகளுக்குள் உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2015-–16ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் இத்திட்டத்தினை, 20 நகரங்களில் அமல்படுத்துவதும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு 40 நகரங்களை, இத்திட்டத்தின் கீழ் இணைப்பதும், மத்திய அரசின் திட்டம் ஆகும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டிற்குத் தான் 12 சீர்மிகு நகரங்களை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு, மாநகர் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளில் 6000 கோடி ரூபாய் அளவுக்கு, இத்திட்டத்திற்கு நிதியுதவி மத்திய அரசு வழங்கவுள்ளது. மத்திய அரசுக்கு இணையாக, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசும், சராசரியாக ஐந்து ஆண்டுகளில், 6000 கோடி ரூபாயை வழங்கவுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இத் திட்டத்தின் கீழ் போதிய குடிநீர்வழங்குதல்,உறுதியளிக்கப்பட்ட மின்சக்தி வழங்குதல்,திடக்கழிவு மேலாண்மை உட்பட துப்புரவு செய்தல், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செம்மையான ஏற்பாடு செய்தல்,மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு கட்டுபடியாகிற விலையில் வீட்டுவசதி ஏற்படுத்துதல், வலுவான தகவல் தொழில் நுட்ப இணைப்பு வசதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், சிறந்த ஆளுகை, குறிப்பாக மின் ஆளுகை மற்றும் மக்கள் பங்கேற்பு,நீடித்த தன்மை வாய்ந்த சுற்றுச் சூழல்,மக்களின், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு, உடல் நலன் மற்றும் கல்வி ஆகிய உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இத்திட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது, 2015–-16 முதல் 2019-–20ஆம் நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
சீர்மிகு நகரங்களை உருவாக்கத் தேவையான செயல் திட்டங்களைத் தயாரிப்பதில், மாநகராட்சிக்கு உதவிட 7 கலந்தாலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு, இந்திய அரசு வலைதளம் மற்றும் சமூக வலைதளங்களில் விரிவாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளதால், பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் உட்கூறுகள் அனைத்தும், மிகவும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களைக் கொண்டதாக தமிழகம் அமையும் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.