முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நல கூட்டியக்கம் தேர்தலுக்கு தேறாத அணி: இளங்கோவன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:

முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற கட்சி பாரதிய ஜனதா. மாட்டு இறைச்சி பரிமாறியதற்காக காஷ்மீர் சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ.வை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் இப்போது போதி மரத்து புத்தர் போல் மோடி கூறும் அறிவுரையை யாரும் ஏற்க மாட்டார்கள். உண்மையிலேயே இந்து, முஸ்லிம் ஒற்றுமையை விரும்பினால் அவர்கள் விரும்பும் சுதந்திரத்தை வழங்க வேண்டும். எதை சாப்பிடுவது, எதை சாப்பிட கூடாது என்பதெல்லாம் அவரவர் உரிமை.வருகிற நவம்பர் 14–ந்தேதி நேருவின் 125–வது பிறந்த நாள் விழா டெல்லியில் கொண்டாடப்படுகிறது.

இதில் தமிழத்தில் இருந்து ஏராளமான காங்கிரசார் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தலித்துகளுக்கு காங்கிரஸ் செய்த நன்மைகள் பற்றி தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும். இதற்கான ஏற்பாட்டை எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை செய்து வருகிறார்.காங்கிரசில் மண்டல மாநாடுகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அதன் பிறகு அனைத்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மாநாடு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டுக்கு சோனியாவும், ராகுலும் வர சம்மதித்துள்ளார்கள். தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.காங்கிரசை பொறுத்தவரை எல்லா தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம். மூவர் அணி, நால்வர் அணி அனைத்தையும் பார்த்து விட்டோம்.

அதே போல் மக்கள் நல கூட்டியக்கமும் தேர்தலுக்கு தேறாத அணி. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆட்சியை பிடித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் மட்டும்தான் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மீண்டும் அந்த வரலாறை கொண்டு வருவோம்.தமிழ்நாடு முழுவதும் 64 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. அதில் 80 சதவீதம் வாக்குச் சாவடிகளுக்கு காங்கிரஸ் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹசினா சையத் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கு இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் குமரிஅனந்தன், கோபண்ணா, செல்வம், செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago