முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் யாத்திரை நெரிசல் விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

மினா - சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.  இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது., ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32 இந்தியர்களை காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக வியாழக்கிழமை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது,  நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களிலிருந்து மேலும் 7 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து பலியான இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என புகார் வந்துள்ளது.

சடலங்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக சவுதி சுகாதார அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளோம்.இந்தப் பணிகளை நமது மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் சவுதியில் இருந்தபடி மேற்கொண்டு வருகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்