முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் புகழ் பெற்ற சோம்நாத் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற சோம்நாத் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் புகழ் பெற்ற சோம்நாத் சிவன்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகின்றனர். இந்நிலையில் கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. மர்ம நபர்களால் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கோயிலின் மூலை முடுக்கு உள்ளிட்ட சகல இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இந்த கோயில் கடற்கரையோரமாக அமைந்திருப்பதால் கடலோர காவல்படையினரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த மிரட்டல் கடிதம் வதோதரா நகரில் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இதை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எழுதியிருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டு மிரட்டலையொட்டி கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்