முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி தலைநகர் அங்காராவில் அமைத்தி பேரணியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

அங்காரா - துருக்கியில் தலைநகர் அங்காராவில் அமைதி பேரணியில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு துருக்கியில், அரசப்படைகளுக்கும், குர்தீஷ் இன குழுவிற்கும் நடுவே, யுத்தம் நடந்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர அரசை வலியுறுத்தும் வகையில், தலைநகர் அங்காராவில், பெரும் பேரணி நடத்த இடதுசாரி அமைப்புகள் அழைப்புவிடுத்திருந்தன.

இதையடுத்து துருக்கியில் நேற்று ரயில் நிலையம் ஒன்றின் அருகே, மக்கள் பெருமளவில் கூடியபடி இருந்தனர். அப்போது, அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் பலர் உடல் சிதறி பலியாயினர். இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவ இடத்திலிருந்த இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறும்போது 15 பேரது உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்தேன். ஆங்காங்கே மனித உடல்களின் பாகங்கள் கிடக்கின்றன என்றார். சம்பவம் குறித்து பிரதமர் அஹ்மெட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago