முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்முறை குத்துச்சண்டை போட்டி: விஜேந்தர் சிங் வெற்றி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தான் கலந்துகொண்ட முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து விஜேந்தர் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங், தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் சனிக்கிழமை முதல் முறையாக களம் இறங்கினார். ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற பெயரில் நடந்த இப்போட்டியில் பிரிட்டனின் சோனி ஒயிட்டிங்கை சந்தித்த அவர் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து நேற்று நிருபர் களிடம் கூறிய அவர்,  பொதுவாக நான் பதட்டப்பட மாட்டேன். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்தப் போட்டியை கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால் இந்தப் போட்டியில் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். இந்த வெற்றி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. என் அடுத்த குத்துச்சண்டைப் போட்டி வரும் 30-ம் தேதி நடக்கிறது. அதில் நான் யாரை எதிர்கொள்ளப் போகிறேன் என்பது இன்னும் சில நாட் களில் தெரிந்துவிடும். முதல் போட்டியைப்போல் அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல் படுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்