எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: விதிகளை மீறி, இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் சம்பவங்களைக் கண்டு மத்திய அரசு இனியும் மெளனமாக இருக்கக் கூடாது என்றும் இந்த பிரச்னையில் தூதரக ரீதியிலான உயர்மட்ட அரசியல் தலையீடும் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 20 நாட்களாக ஆறு வகையான சம்பவங்களில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ளனர்.அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 12ம்தேதி இரவு ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து 24 மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அங்குள்ள தலைமன்னாருக்கு சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இதுவரை, தமிழகத்தைச் சேர்ந்த 78 மீனவர்களும், 38 படகுகளும் இலங்கையின் பிடியில் உள்ளன. இலங்கையில் ஆட்சி மாறியவுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான சாதகமான வாய்ப்பு ஏற்படும் என்று நம்பியிருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக மீனவர்களை கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய, துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னைகள் குறித்து தொடர்ச்சியாக தங்களுக்கு தெரிவித்தும் அதில், உறுதியான நடவடிக்கை ஏதுமில்லை. இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் பல நாட்களாக தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்னைகளுக்குரிய. தீர்வுகளை நான் முன்வைத்த நிலையில் மீனவர்களை கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.என்று கருதுகிறேன்.,
1974-75 ஆம் ஆண்டுகளில் அரசிமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தியா-இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை விரைவில் மீட்டு அதில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலை நாட்ட வேண்டும்.என்ற எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்னை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் இந்த வழக்குடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வுகளில் ஒன்றான ஆழ்கடல் மீன்பிடிப்பு-உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சிறப்பு நிதித் தொகுப்பாக ரூ.1,520 கோடியையும், ரூ.10 கோடியை ஆண்டு பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். . இதுகுறித்த கோரிக்கையை கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தங்களிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளேன். எனவே, இதற்குரிய நிதியை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்களை துன்புறுத்துவதும், அவர்களை கைது செய்வதுமான சம்பவங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் அவர்களின் மீன்பிடிப்பு உரிமையை ஒழித்துக் கட்டுவதாகும். இது, ஆயிரக்கணக்கான நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையாகும். இதனை மிகப்பெரிய சமூக-அரசியல் பரிமாணத்துடன் பார்க்க வேண்டும். விதிகளை மீறி, இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் சம்பவங்களைக் கண்டு மத்திய அரசு இனியும் மெளனமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரச்னையில் தூதரக ரீதியிலான தலையீடு மட்டுமின்றி உயர் நிலை அளவிலான அரசியல் தலையீடும் உடனடியாகத் தேவை. இப்போதைய சூழலில், இலங்கையுடனான எந்த கலந்துரையாடலின் போதும் மீனவர்கள் பிரச்னையை தலையாய பிரச்னையாக வைத்து விவாதிக்க வேண்டும் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, கடந்த 12 ம்தேதி இலங்கை கடற்படையில் சிறைபிடித்து செல்லப்பட்ட 24 பேர், அவர்களின் 4 படகுகள் உள்பட இதுவரை சிறையிலுள்ள 78 தமிழக மீனவர்களையும், 38 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.