முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலுவை திட்டி நிதிஷ் எழுதிய கடிதத்தை பாஜக வெளியிட்டதால் பரபரப்பு

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - 23 ஆண்டுகளுக்கு முன்பு லாலுவை விமர்சித்து நிதிஷ் குமார் எழுதிய கடிதத்தை பாஜக வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு உள்ள நிலையில் லாலு, நிதிஷ் கூட்டணிக்குள் சங்கடத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்துள்ளது. பீகாரில் நிதிஷ், லாலு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலை யில், பீகார் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டது பாஜக.

நிதிஷ் குமார் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில் லாலு பிரசாத் யாதவை விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், சமூக நீதி என்பதை வெற்றுக் கோஷமாக மட்டுமே லாலு முன்வைக்கிறார் எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறது எனவும், காவல் துறை நியமனங்களில் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் முன்னிறுத்தி பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அக்கடிதத்தில் உள்ள முக்கிய மான சிலவற்றை மட்டும் விளம்பரத்தில் பிரசுரம் செய்து, உங்களின் வாக்கு யாருக்கு என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்