முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து நடத்த வேண்டும்: நடிகர் சூர்யா வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து நடத்த வேண்டும் என்று புதிய நடிகர் சங்க நிர்வாகி களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாமல் கொடுத்த வாக்குறுதி களை இதயத்தில் இருந்து நிறைவேற்றுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங் களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர் தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.பொறுப்பில் இருக்கும்போது செய்த ‘கடமைகள்’, ‘உதவிகளாக’ சித்தரிக்கப்பட்டன. ‘நடிகர்கள் ஒரே குடும்பம்’ என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப் பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீத ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள் வீசப்பட்டன.

இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர் களுக்கு, சகல கலைஞனாக என்னு டைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள்.பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள், சக கலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்