முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடன் கூட்டு சேர மாட்டோம்: மார்க்சிஸ்டு கட்சி அறிவிப்பு

சனிக்கிழமை, 7 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ம.தி.மு.க. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. முயற்சிப்பதாக வைகோ குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு டெல்லி சென்று சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசி வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:–டி.ஆர்.பாலு சந்தித்தது எனக்கு தெரியாது. ஆனால் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் மாநில குழுவும் எடுத்த முடிவுதான் இறுதியானது. மக்கள் நல கூட்டணியில்தான் உறுதியாக இருக்கிறோம். இதில் மாற்றம் இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை.கோவையில் 25–ந்தேதி நடைபெறும் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியே பங்கேற்க இருக்கிறார். எனவே எங்கள் முடிவில் எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்