முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித் தரிசனம்

சனிக்கிழமை, 7 நவம்பர் 2015      சினிமா
Image Unavailable

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித் சுவாமி தரிசனம் செய்தார். வோதாளம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக நடிகர் அஜித் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடேஸ்வர சுவாமியை தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு துயில் எழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறுகிறது. இதேபோல்நேற்று அதிகாலை நடந்த சேவையில் நடிகர் அஜித் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அஜீத் நடித்த வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் வெற்றி பெற வேண்டி அவர் சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருந்து சுப்ரபாதம் டிக்கெட் பெற்று பக்தர்களுடன் வரிசையில் கடைசியாக வந்தார். கோயிலுக்குள் தேவஸ்தான ஊழியர்கள் அஜித்தை முன்னாள் வந்து சுவாமி தரிசனத்திற்கு வரும் படி அழைத்தனர். ஆனால் பக்தர்களுடனே தரிசனம் செய்வதாக கூறி பின்னாள் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அஜீத்தை பார்த்தவுடன் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் அஜீத்துடன் போட்டோ எடுக்க திரண்டனர். அவர்களுடன் நிதானமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து ரசிகர்களையும் எனது இதயத்தில் வைத்திருக்கிறேன். வேதாளம் படப்பிடிப்பின் போது வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்