முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸில் தாக்குதல் தீவிரவாதிகளை பிடிக்க போலீஸ் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

புதன்கிழமை, 18 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

பாரீஸ்: பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க பிரான்ஸ் அதிரடிப் படை போலீஸார் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சண்டையின் போது பெண் உட்பட 2 பேர் பலியாகினர்.  பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு வெடித்துச் சிதறினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீஸார் குவிந்தனர்.

அங்கு தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது,  பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்