முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார் : லல்லுவின் இருமகன்கள் அமைச்சர்கள் ஆனார்கள்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்ன - பீகார் மாநிலத்தின் முதல்வராக 5வது முறை நிதிஷ்குமார் நேற்று பதவியேற்றார். லல்லு பிரசாத்தின் இரு மகன்கள் அமைச்சர்கள் ஆனார்கள்.இதில் தேஜஸ்வி  துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தில் கடந்த  அக்டோபர் மாதமும் இந்த நவம்பர் மாதமும் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது.243தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் தேர்தல் 5கட்டமாக நடைபெற்றது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து மெகா கூட்டணியாக போட்டியிட்டன.  

இந்த மெகா கூட்டணி  178 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. மொத்தம் உள்ள தொகுதிகளில் 3ல் இரு பங்கு தொகுதிகளை மெகா கூட்டணி கைப்பற்றி இருந்தது. இந்த கூட்டணிக்கு ஈடுகொடுக்க முடியாமல்  பாரதிய ஜனதா கூட்டணி தோல்வி அடைந்தது. அந்த கூட்டணி மொத்தம் 58 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி 53தொகுதிகளில் வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார்  28 அமைச்சர்களுடன் பதவியேற்றுக்கொண்டார். இந்த அமைச்சரவையில் லல்லு பிரசாத்தின் இரு மகன் களுக்கும் பதவியளிக்கப்பட்டது நேற்றைய பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாரைத்தவிர ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளில் இருந்து தலா 12 உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியில் 4 பேர் அமைச்சர்கள் ஆனார்கள்.அவர்களுக்கு கவர்னர் ராம் நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர் ஆவார் என்ற யூகம் இருந்தது. அதுபோலவே அவர் துணை முதல்வராக  நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பதவியேற்ற அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ கவுடா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் காங்கிரஸ் கட்சி யின் பல மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு  பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். மோடிக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  வேண்டி இருந்ததால், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இடம் பெறும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சைலேஷ் குமார், குமாரி மஞ்சு வர்மா, மதன் சகானி மற்றும் கபில் தியோ ஆகியோரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஒரே பெண் அமைச்சர் அனிதா பதவிஏற்றுக்கொண்டார்.

பீகாரில் நடந்த சட்டசபைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 80 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. அரசியல் சாசனப்படி மொத்தம் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களில் 15சதவீதத்தினர் அமைச்சர்களாக ஆக முடியும் அதன் படி நிதிஷ் குமார் ,அவர் உள்பட 36அமைச்சர்களை பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago