எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உடனடி வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும், 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சேத விவரங்கள் அடங்கிய பட்டியல், கடிதத்துடன் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இடைக்கால ஏற்பாடாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.மேலும், சேத நிலைமையை உடனடியாக பார்வையிடவும், தாமதமின்றி நிதியுதவி வழங்கவும் ஏதுவாக மத்தியக்குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் பெய்துள்ள பலத்த மழை காரணமாக ஏற்பட்ட விரிவான சேதங்களை சீரமைக்கும் பணிக்காக தேவைப்படும் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பிற மத்திய அரசு நிதியிலிருந்தும் உதவிடக்கோரி, தமிழக அரசின் விரிவான கோரிக்கை மனுவை இணைத்து இக்கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 10-ம் தேதியன்று மரக்காணம் அருகே தமிழ்நாடு கடற்கரையை தாக்கியதில், வட கடலோரம் உள்ள கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்தமழை பெய்தது.- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கைகளையும், தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பிடமிருந்து பெற்ற எச்சரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, உயிர்ச் சேதங்களையும், சொத்து சேதங்களையும் குறைந்தபட்ச அளவிற்கு குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில அரசின் அமைப்புகளும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகங்களும், உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டன. – அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது – தமிழக அரசு மற்றும் வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டன .
இதுதவிர தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் உதவியும், தேவையான இடங்களில் கோரி பெறப்பட்டன – இப்படைகளை உடனடியாக அனுப்பி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கப்பட்டன – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன – கடினமான சூழ்நிலையில் ஓய்ச்சல், ஒழிவின்றி உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டியுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மிக பலத்த மழை பெய்ததாலும், பல நாட்களுக்கு இந்த மழை நீடித்ததாலும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தபோதிலும், பல்வேறு பகுதிகளில் சேதங்களும், அழிவுகளும் ஏற்பட்டன. – உதாரணமாக நெய்வேலியில் கடந்த 9-ம் தேதியன்று 437 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது – இதேபோன்று, சென்னையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், நவம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 2-வது மிக கனமான மழை பதிவாகியுள்ளது – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையைத் தொடர்ந்து, மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டதால், மழை தொடர்ந்து பல நாட்களுக்கு நீடித்தது – இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையால் 169 பேர் உயிரிழந்துள்ளனர் – வீடுகள், பயிர்கள் என பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன – சாலைகள், பாலங்கள், வெள்ள வடிகால்கள், குடிநீர் வழங்கும் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் என உட்கட்டமைப்புகளும், மின்சார விநியோகமும் பல பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக எதிர்கொள்ள 500 கோடி ரூபாய் நிதியை தாம் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், கட்டமைப்புகள் சீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக விரைந்து மேற்கொள்ளப்பட்டதில், அதிக நிதி தேவைப்படுவது, மாநில அரசின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. உடனடி மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு தேவைப்படும் நிதி, தற்காலிகமானதுதான்- கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் ஒட்டுமொத்தமாக தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள் மற்றும் தேவைப்படும் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய கோரிக்கை மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை சீற்றத்தினால் நிகழ்ந்த இழப்பீடுகளை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு நிதியுதவி தேவைப்படுவதால், உடனடியாக சேதமதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பைக் காட்டிலும், அதிக அளவு நிதி தேவைப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் முழுமையாக முடிந்துவிடவில்லை என்பதையும், வடகிழக்குப் பருவமழை சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், மேலும் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் தாம் நன்கு அறிந்துள்ள போதிலும், மத்திய அரசிடமிருந்து நிதியுதவி தேவை என்பதால், சேத மதிப்பீட்டு அறிக்கையை விரைந்து தயாரிக்க அதிகாரிகளை தாம் கேட்டுக் கொண்டிருந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை உடனடியாக முழுமையாக சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், தீவிர நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள தமிழக அரசின் நிதி நிலைமைக்கு வலு சேர்க்கும் வகையிலும், மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க ஏதுவாகவும், சேத மதிப்பீடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய, தமிழகத்திற்கு மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, தமிழக அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் இதே அளவு வேகத்தில் விரைந்து மேற்கொள்ள, இடைக்காலமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.