முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: டிராவிட் சாதனையை சமன் செய்த ராபின் உத்தப்பா

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்  தொடரில் ராபின் உத்தப்பா தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசியதந் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின்  சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.  ரஞ்சி கோப்பையில், கர்நாடக அணிக்காக ராபின் உத்தப்பா விளையாடி வருகிறார். ஹூப்ளி நகரில் தொடங்கிய, குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், டெல்லி-கர்நாடக அணிகள் மோதி வருகின்றன. இதில் ராபின் உத்தப்பா, 148 ரன்கள் குவித்தார். ரஞ்சி தொடரில் இது உத்தப்பாவின் 17வது சதமாகும். கர்நாடகாவுக்காக ராகுல் டிராவிட் 17 சதங்கள் அடித்திருந்த நிலையில், அதை உத்தப்பா சமன் செய்துள்ளார்.

கர்நாடகாவுக்காக 26 சதங்கள் விளாசிய முன்னாள் வீரர், பிரிஜேஷ் பட்டேல் அம்மாநில ரஞ்சி வீரர்களில் முதலிடத்திலுல்ளார். டிராவிட் 48 போட்டிகளிலேயே 17 சதங்களை கடந்தார். உத்தப்பாவுக்கு 90 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது. நடப்பு ரஞ்சி தொடரில் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் விளாசிய, உத்தப்பா, தொடர்ந்து 3வது சதத்தை பதிவு செய்து ஹாட்ரிக் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்