முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆமிர் கான் பேச்ச விவகாரம்: கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி: நடிகர் ஆமிர் கான் சகிப்பின்மை பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது.,

இந்தியாவை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தாரளமாக வெளியேறலாம். அதனால் மக்கள் தொகை குறையும் என பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். சகிப்பின்மை தொடர்பாக மத்திய அரசு மீது பல்வேறு விமர் சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கள்கிழமை நடிகர் ஆமிர் கான்,  டெல்லியில் விழா ஒன்றில் பேசும் போது, இந்தியாவில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதால் நாட்டை விட்டு வெளியேற தன் மனைவி விரும்பினார் எனக் கூறியிருந்தார். மேலும், விருதுகளை திருப்பிக் கொடுக்கும் போராட்டம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பு எனவும் தெரிவித் திருந்தார்.இதுதொடர்பாக பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறும்போது, நாட்டை விட்டு யாரேனும் வெளியேற விரும்பினால், நாங்கள் அவர்களைத் தடுக்கப்போவதில்லை. குறைந்த பட்சம் நம் நாட்டில் மக்கள் தொகை குறையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்