எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வெள்ளத்தில் மிதக்க கடந்த கால திமுக ஆட்சியே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் வைர வரிகளில் சொல்வதானால், மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை காணாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை அனுப்பி போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டனர். சென்னை- காஞ்சிபுரம் மாவட்டங்களில் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது ஒரு பக்கமிருக்க முதல்வர் ஜெயலலிதா, தானே களத்தில் இறங்கி, சென்னை ஆர்.கே. நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், அம்பத்தூர் என்று ஐந்து தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து, மழை வெள்ளம் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரி தலைமையிலான அரசு இருக்கிறது.என்று ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.. இதனால் மழை வெள்ளத்தில் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் ரூ 2 ஆயிரம் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. இதன் பலனை தமிழகம் முழுவதும் குடிசைகள் முதல் மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வரை .பெற்றனர். எனவே சொன்னால் செய்வார் அம்மா என்பதால் ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகளில் மக்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தனர். முதல்வரும் சொன்னதோடு நில்லாமல் . மழை வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ2 லட்சமாக இருந்த உதவித்தொகையை 4 லட்சமாக உயர்த்தினார். மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த குடிசைகள் முதல் கால்நடைகள் வரை இழப்பீட்டுத் தொகையையும் அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் வலம் வந்து தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் துணையோடு அகற்றினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னையில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைக்கால மருத்துவ முகாம்களை ஆங்காங்கே தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீர் பட்டித்தொட்டியெங்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக ஆயிரத்து 61 இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் அமைக்கப்பட்ட மழைக்கால மருத்துவமுகாம்களும், மக்களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் அளவுக்கு வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரும் மழைக்கால நோய்களுக்கு வழியில்லாமல் செய்தன என்றே கூறலாம்.
கடலூர் மாவட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார். எம்.சி. சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு மழை வெள்ளம் பாதித்த மக்களை ஒரு கிராமம் விடாமல் சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வழங்கிய நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினர். ஆங்காங்கே தேங்கிய மழை நீரையும் அகற்றிட உத்தரவிட்டு, புயல் வேக நடவடிக்கை மேற்கொண்டனர். மற்ற மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த அமைச்சர்கள் நடவடிக்கைகளில் இறங்கினர், இது ஒரு பக்கமிருக்க சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா, ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை என்று பாரதியின் புதுமைப்பெண்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு , மக்களை சந்தித்து தங்க இடமளித்து, உண்ண உணவளித்து , உடையும் கொடுத்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகாரிகள் மட்டுமல்ல: அமைச்சர்களும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. அதில் ஆர்வம் காட்டவில்லை. முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் மாநிலமே பாராட்டியது.
ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாராட்ட மனம் இல்லாமல், நாள்தோறும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். திமுக பொருளாளர் மு..க.ஸ்டாலின் நாள்தோறும் கொளத்தூரை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்து மழை நிவாரண நடவடிக்கைகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வருகிறார். கடந்த காலத்தில் நீர்நிலைகள்-ஏரிப் பகுதிகள் குடியிருப்புகளுக்கு ஏற்ற இடமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு திமுக ஆட்சிக்காலத்தில் மீறப்பட்டது. ஏரிகள்-குளங்கள் அனைத்தும் திமுக மற்றும் அவர்களது பினாமி ரியல் ஸ்டேட் செய்யும் தொழிலதிபர்களின் கையில் சிக்கியது. அனைத்தும் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு, அவை சொந்த வீட்டு கனவோடு இருந்த ஏழை-நடுத்தர மக்களிடம் விற்கப்பட்டன. விதிகளை மீறி ஏரி பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு பட்டாக்களும் பல லட்சக்கணக்கில் வழங்கப்பட்டன.
திமுக ரியல் எஸ்டேட் பினாமிகள் விற்ற நிலங்கள் வீடுகளைக் கட்டியவர்கள் இப்போது கண்ணீர் கடலில் ஆழ்ந்து வருகின்றனர். இப்போது பெய்த அதிக மழையால், இதுவரை நீரைப் பார்க்காத குளம்-குட்டை-ஏரிகளில் மழை நீர் பாய்ந்தோடியது. குளம்-குட்டைகளில் வீடுகளைக் கட்டிய சென்னை மற்றும் புறநகர் வாசிகள், திடீரென பாய்ந்து வந்த மழை-வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். இதுவே, சென்னையும்-மாநிலத்தின் மற்ற பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்க காரணமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள். ஏற்கெனவே நில அபகரிப்பு புகார்களிலும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி இருக்கும் திமுகவினர் மீது ஏரிகளை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்றது
தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தால் உண்மைகள் வெளியாகும் என்கிறார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் . மழை வெள்ளத்திற்காக அதிமுகவை குற்றம்சாட்டும் திமுக தலைவர் கருணாநிதி, தான் பேரறிஞர் அண்ணா காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். தமிழகத்தில் இருக்கும் ஆறுகள், அணைகள் , ஏரிகள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. அதை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகள் கருணாநிதிக்கு தெரியாததல்ல. அவருக்குப் பின் திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். சட்டப் பேரவையில் பொதுப்பணித் துறை சார்பில் ஒரு கால்வாய் தொடர்பாக கேள்வி கேட்டாலும் அதற்கு மனப்பாடமாக பதில் சொல்வார். அத்தகைய திமுகவினருக்கு சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் எந்தெந்த ஏரிகள்-குளங்கள்-கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது நன்கு தெரியும். ஆனால், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் எந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற முன்வரவில்லை. ஆனால், இப்போது ஊரை ஏமாற்றவும், தேர்தல் நெருங்குவதாலும் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது மைந்தர் மு.க.ஸ்டாலினும் அறிக்கைகள் என்ற பெயரிலும், நேரில் ஆய்வு என்ற நாடகத்தாலும் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். அது, கனவிலும் நடக்காது என்பது நடுநிலையாளர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்18 hours 39 sec ago |
பெப்பர் சிக்கன்4 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 18 hours ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.