எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதம் குறித்து ஆராய வந்த குழுவினர் , தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது வெள்ளம்பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்,.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக் குழுவினர், முதலமைச்சர் ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அவர்களிடையே பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, வெள்ளசேத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க்கால அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கினார், .
தமிழ்நாட்டின் கனமழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியை, உடனடியாக தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் \ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அளவுக்கு மத்திய நிதியுதவியை அளிக்க ஏதுவாக, மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பது மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு, உடனடி நிதியுதவியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை, தமிழக அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டது. மேலும், வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து, கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க, விரைவில் மத்திய ஆய்வுக் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
இதன்படி, டி.வி.எஸ்.என்.. பிரசாத் தலைமையில் தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக்குழுவினர், முதலமைச்சர் ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அவர்களிடையே பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் பெய்துள்ள மிக பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மத்திய அரசின் நிதியுதவி விரைந்து கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிக விரிவாக மதிப்பீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது, மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத், தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட வெள்ளசேத விரிவான அறிக்கையை தான் படித்ததாகவும், அதிலிருந்து தமிழக அரசு வெள்ள சேதங்களை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் உடனடி நிவாரண, சீரமைப்புப் பணிகள் தெளிவாகத் தெரிகின்றன என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் உயிரிழப்பு மற்றும் வெள்ள சேதங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன என்று தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெள்ள பாதிப்பு பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டு மத்திய அரசுக்கு விரைந்துஅறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் பிரசாத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத், வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் ஒய் ஆர். மீனா, நிதியமைச்சக இணை இயக்குநர் எம்.எம்..சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் ஜி.ஆர்..ஜார்கர் மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குநர் டாக்டர் ஆர்.ரோஷினி, எரிசக்தி துறை உதவி இயக்குநர் சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் பி.சி.போக்ரா, மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் என்.எம்.. கிருஷ்ணன் உன்னி, சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குநர் டி.எஸ். . அர்விந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மற்றும் தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர். ஓ. பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் . நத்தம் இரா. விசுவாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்துறை அமைச்சர் . ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோருடன் தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஆலோசகர், நிதித்துறை முதன்மை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வேளாண்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
மத்திய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை வரும் 28ம் தேதி வரை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.