எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நேற்று பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும், அங்கு பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை போன்றவை வழங்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அடுத்தடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை வெள்ளம் வடியாததால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழை நின்ற பிறகும் கூட பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த 7–ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அது முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு மறுநாள் (11–ம் தேதி) அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் அன்றைய தினமும் பலத்தமழை பெய்ததால் தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து படிப்படியாக தண்ணீர் வற்றியது. வடியாத இடங்களில் மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று (26–ம் தேதி) பெரும்பாலான அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. ன்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்பதால் வகுப்புகள் நடத்த முடியாத நிலை காணப்பட்டது. அது போன்ற பாதிப்புகள் உள்ள பள்ளிகள் தவிர ஏனைய தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிக்கூடங்கள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன. இதில் 5 மாநகராட்சி பள்ளிகளும் 19 அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதால் திறக்கப்படவில்லை. வகுப்பறைகள், கழிவறைகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும், சேறும் சகதியுமாக காணப்படுவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாம்பலம், வேளச்சேரி, ஆசிர்வாதபுரம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், ஓட்டேரி, சாலிகிராமம், சின்னமலை, ஆயிரம்விளக்கு, அரும்பாக்கம், கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்னும் விடுமுறை நீடிக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மவுலிவாக்கம், செம்மஞ்சேரி, மாங்காடு, கீழ்ஒட்டிவாக்கம், சிறுமுடிவாக்கம், கோவளம், இடை பாத்தூர், இரும்புலிச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகள் திறக்கப்படவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர், முகப்பேர் கிழக்கு, சுபரெட்டி பாளையம், நாபாளையம், திருவள்ளூர் புங்கத்தூர் ஆதி திராவிடர் பள்ளி உள்பட 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 19 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ– மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு சென்றார்கள்.
மழைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறந்ததும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை போன்றவை கல்வித்துறை சார்பில் மீண்டும் வழங்கப்பட்டன. மழை வெள்ளத்தில் பாடப்புத்தகங்களை இழந்த அனைவருக்கும் குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மழை பாதிப்பால் நேற்று திறக்காமல் உள்ள பள்ளிகள் இன்று (27–ம் தேதி) திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சில பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் தான் நேற்று திறக்கப்படவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். பெரும்பாலும் நாளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.