முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலை பேசி இணைப்பு முறைகேடு வழக்கு சிபிஐ அலுவலகத்தில் தயாநிதி மாறன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் சிபிஐக்கு அனுமதி மறுத்துவிட்டனர். கடந்த 2004-07ம்ஆண்டு  காலகட்டத்தில், தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்  ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு  சுப்ரீம் கோர்ட்டில்நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 7 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர். அதேவேளையில் அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டனர். மன் மோகன் சிங் ஆட்சி காலத்தில் எத்தனையோ ஊழல்கள் நடைபெற்றன. நாட்டிற்கு 1.76லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மாபெரும் ஊழல் தான் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் .இதில் சிக்கி திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கனி மொழி எம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.

அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ214கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. இது தொடர்பாக கனிமொழி ,தயாளு அம்மாள், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகு தயாநிதி மாறன் மீதான முறைகேடுகள் அம்பலமாகின. அதாவது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை அவர் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் தற்போது அவர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்