முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: சரத்குமார் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தமிழர்களின் கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மத்திய அரசு ஆவண செய்யும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. டிசம்பர் மாதமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகளை அந்தந்த கிராமத்தினர் தொடங்க வேண்டியுள்ளது. காலதாமதப்படுத்தாமல் விலங்கின பட்டியலில் இருந்து “காளையை” நீக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.மத்திய அமைச்சர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதிப்படுத்தியிருப்பதால் டிசம்பர் 8-ந் தேதி அன்று ”ஜல்லிக்கட்டு” நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்