எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் - கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சி எடுத்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்ளு மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையினை ஏற்று, கடலூர் மாவட்டத்திற்கு நேற்று மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் பார்வையிட வருகைபுரிந்துள்ளார்கள்.
இக்குழுவில் மத்திய வேளாண்மைத்துறை கூடுதல் ஆணையர் ஒய்.ஆர்.மீனா, மத்திய நிதித்துறை இணை இயக்குநர் எம்.எம்.சச்தேவா, மத்திய குடிநீர் துறை முதுநிலை ஆலோசகர் ஜி.ஆர்.ஜார்கர், மத்திய குடிநீர் துறை முதுநிலை மண்டல இயக்குநர் டாக்டர்.ஆர்.ரோஷினி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் சுமித் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.சி.பெஹரா, மத்திய நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன்உன்னி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல இயக்குநர் டி.எஸ்.அரவிந்த் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிக்கு வருகைபுரிந்த இக்குழுவினர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இவர்களுடன் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் வருகைபுரிந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, இக்குழுவினர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களுடன் வெள்ளச்சேதங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும், 09.11.2015 முதல் பெய்த கனமழையினாலும், ஒரே நாளில் 183 செ.மீ. மழை பெய்ததாலும், எதிர்பாரா விதமாக வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டது. வெள்ளச்சேதங்களை பார்வையிட்டு மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 6 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து முகாமிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
அதன்பேரில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரும் பணியினை பார்iவியட்டு, பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். பின்னர், இக்குழுவினர் விசூர் கிராமத்தில் உள்ள காட்டாற்றின்கீழ் கட்டப்பட்டுள்ள பாலத்தில் புதுப்பிக்கப்பட்ட கரைப் பகுதிகளையும் பார்வையிட்ட பின்னர், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றுவருதை நேரடியாக பார்வையிட்டார்கள். மேலும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்புப் பொறியாளர் கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் வெள்ளச்சேதங்கள் எப்படி ஏற்பட்டது, என்ற விவரத்தை புகைப்படங்கள் மூலம் குழுவினருக்கு விளக்கமாக தெரிவித்தார்.
அதை பார்த்த பின்னர், குழுவினர் விசூர் கிராமத்திற்குள் வீதிவீதியாக சென்று அங்கு பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இக்குழுவினரிடம் வடிவேல் என்பவர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் என்னுடைய வீடு இடிந்து பாதிப்படைந்தது. மேலும், இவ்வெள்ளத்தில் எனது மனைவி மற்றும் மகள் அடித்துச் சென்று இறந்து விட்டனர். மற்ற இரண்டு பிள்ளைகளான 1 ஆண் பிள்ளை பன்னிரண்டாம் வகுப்பும், மற்றொரு ஆண் பிள்ளை 8ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட அன்றைய தினம் நாங்கள் புளியமரத்திலேறி தப்பித்து உயிர் பிழைத்தோம். எனது மனைவி மற்றும் மகள் இறந்தது, மறுநாள்தான் எனக்கு தெரியவந்தது. மேலும், ஒரு இரவிற்கு பிறகுதான் இருவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் இழப்பிற்கும் தலா ரூ.4 லட்சம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
எனக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டுமென குழுவிடம் கோரிக்கையினை தெரிவித்தார். உக்கிரவேல், கிருஷ்ணமூர்த்தி, குமரவேல் ஆகியோரது வீடு மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என குழுவிடம் தெரிவிக்கப்பட்டதற்கு, குழுவின் முன்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் , இவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவித்தார். மகேஸ்வரி என்பவர் தன்னுடைய வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டது பாதிப்படைந்துள்ளது என்றும் குழுவினரிடம் தெரிவித்தார். கணபதி என்பவர் மழை வெள்ளத்தால் தனது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், 45 ஹெக்டரில் காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவ்வாறு பாதிப்படைந்த காய்கறிகள் மற்றும் மரவள்ளிக் கிழங்கினை குழுவின் பார்வைக்கு காண்பித்தார்.
பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஓடை, சிறிய ஓடையில் பாதிப்பு ஏற்பட்டதை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்புப் பொறியாளர் , இரு ஓடைகளுக்கும் இடையில் தண்ணீர் அதிகமாக வந்ததால் பாதிப்பு ஏற்பட்டு ராஜேஸ்வரி கஃபெ.ரங்கசாமி என்ற ஒரே குடும்பத்தில் 9 நபர்கள் இறந்துவிட்டார்கள் என்றும் குழுவிடம் தெரிவித்தார். குப்பன் என்பவர் குழுவிடம், எனது வீடு, 15 ஆடு, 1 மாடு மற்றும் மிக்சி, கிரைண்டர் ஆகியவை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பெரிய ஓடை, சிறிய ஓடையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், பெரிய காட்டுப்பாளையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்டினை பார்வையிட்டார்.
மத்தியக்குழுத்தலைவர், மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கேற்ப மத்திய அரசு உத்தரவின்படி, மின்வாரியத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்துறை அமைச்சகக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தோம். சாலை வழியாக சென்று ஆய்வு நடத்தினோம். நாங்கள் பார்வையிட்ட பெரியகாட்டுப்பாளையம் மழையினால் கடும் சேதமடைந்துள்ளது. அதிக உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்பான முயற்சி எடுத்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக முகாம்கள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசின் மறுவாழ்வு பணிக்கு நாங்கள் துணையாக இருப்போம். எங்கள் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெறும். ஆய்வின் அறிக்கையை வரும் வாரத்தில் சமர்ப்பிப்போம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இக்குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து ஒரு குழு பூதம்பாடிக்கும், ஒரு குழு மருவாய்க்கும், ஒரு குழு கல்குணத்திற்கும் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.