முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் திருப்பணிகள் சீராய்வு ஆலோசனைக்கூட்டம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - திருப்பணிகள் மேற் கொள்ளும் போது பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அது தொடர்பான விதி முறைகள் பற்றிய ஆலோசனை க்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் குறித்து  சீராய்வு ஆலோசனைக்கூட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்(திருப்பணி) மா.கவிதா தலைமை தாங்கினார். இணை ஆணையர்கள் ராஜ மாணிக்கம், பச்சையப்பன், செல்வராஜ், நடராஜன், வரத ராஜன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளமதுரை, சிவகங்கை ,திருநெல்வேலிமதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக் கோவில் திருச் செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில், சுசீந்திரம் தாணு மாலய பெருமாள் சுவாமி திருக்கோவில் ,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில் , அழகர் கோவில், சங்கரன் கோவில், மதுரை கூடலழகர் கோவில்,ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்