முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வுநிலை: 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும், அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் மையம் கொண்டிருந்ததால் தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது.

இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்தது.சென்னையில்நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. காலை 6 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் பெய்து கொண்டே இருந்தது.காலை 6.30 மணியளவில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள்நேற்று விடுமுறை அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனால் சென்னையில் ஏற்கனவே பெய்தது போல நேற்று பலத்த மழை பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை பொய்யாக்கும் விதத்தில் காலை 7 மணிக்கு பின்னர் மழை நின்றது. தொடர்ந்து வெயில் அடிக்க தொடங்கியது.ஆனாலும் இன்று அதிகாலை பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே தேங்கியிருந்த வெள்ளத்துடன் மழை நீரும் சேர்ந்தது. ஒருசில சாலைகளில் தண்ணீரும் தேங்கி இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. தென் மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தென்மேற்கு நோக்கி நகர்ந்து நீடிக்கிறது.இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்கு தெற்கே பயணிக்கிறது. மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு இல்லாததால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அதன் பிறகு படிப்படியாக மழை குறையும். புயலுக்கான வாய்ப்பு இல்லை.சென்னை மாவட்டத்தை பொருத்தவரை சராசரி மழை அளவான 79 செ.மீட்டருக்கு இதுவரை 117 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆனால் இதுவரை 51 செ.மீ. மழை பெய்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குடவாசலில் 12 செ.மீ., மரக்காணத்தில் 10 செ.மீ., வானூர், திருபுவனம், மணல்மேல்குடி, விழுப்புரம் பகுதியில் தலா 9 செ.மீ., தஞ்சாவூர், ஆயகுடி, திருவாரூர், திருமானூர், பாபநாசம் பகுதிகளில் தலா 8 செ.மீ., அரியலூர், குன்னூர், தென்காசி, ராமநாதபுரம், திருவாடானை, நெல்லை, பாபநாசம், காரைக்குடி, வலங்கைமான், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago