எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - திருச்சி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் 55 காவல்துறை குடியிருப்புகள் உள்பட தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறைத்துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய உறுதுணையாக, கடமை உணர்வுடன் பணியாற்றும் காவலர்களின் நலன்களை பேணிக்காத்திடும் வகையில், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களின் அருகிலேயே குடியிருப்புகள் கட்டுதல், காவல்துறையினருக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 55 காவல்துறை குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும் குருவிக்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 410 குடியிருப்புகள்; வேலூர் மாவட்டம் - வேலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 96 குடியிருப்புகள்; தேனி மாவட்டம் போடி நகரத்தில் கட்டப்பட்டுள்ள 76 குடியிருப்புகள்; சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி, அன்னதானப்பட்டி மற்றும் மல்லூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 107 குடியிருப்புகள்;
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 51 குடியிருப்புகள்; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்டப்பட்டுள்ள 50 குடியிருப்புகள்; பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 30 குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம் ஊனமாஞ்சேரி மற்றும் உத்திரமேரூரில் கட்டப்பட்டுள்ள 37 குடியிருப்புகள்; திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் கட்டப்பட்டுள்ள 22 குடியிருப்புகள்; சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் மற்றும் தேவக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள 20 குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டப்பட்டுள்ள 16 குடியிருப்புகள்; கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கட்டப்பட்டுள்ள 19 குடியிருப்புகள்; நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் கட்டப்பட்டுள்ள 13 குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள 11 குடியிருப்புகள் என 83 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 958 காவல் துறை குடியிருப்புகளையும் முதல்வர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொதத்தூர் பேட்டை; கடலூர் மாவட்டம் ஆலடி, புவனகிரி மற்றும் கடலூர் புதுநகர்; விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், தியாகதுர்கம் விழுப்புரம் மேற்கு, பகன்டைகுட்டுச்சாலை, பிரம்மதேசம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு; திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மற்றும் செங்கம்; ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல்; திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி மற்றும் தாண்டிக்குடி; திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், குருவிக்குளம், விஜயநாராயணம் மற்றும் திருக்குரான்குடி; கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் பந்தய சாலை; சேலம் மாவட்டம் தம்மம்பட்டி; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை; நீலகிரி மாவட்டம் காந்தல், சோளூர்மட்டம், வெலிங்டன் மற்றும் குன்னூர்; தேனி மாவட்டம் அல்லிநகரம் மற்றும் தென்கரை;
ஈரோடு மாவட்டம் அரசலூர்; மதுரை மாவட்டம் மதிச்சியம் ஆகிய இடங்களில் 18 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 33 காவல் நிலையங்கள்; விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை; மதுரை மாவட்டம் மதுரை; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி; நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் காந்தல் ஆகிய இடங்களில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை எழும்பூரில் 500 காவலர்களுக்கான தங்குமிடம்; புதுப்பேட்டையில் ஆயுதப்படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம், அண்ணா சதுக்கத்தில் கடலோரக் காவல் நிலையம், 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம் மற்றும் அசோக் நகரில் காவல் பயிற்சியாளர்கள் பயிற்சி மையம்; நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் 20 கடலோரக் காவல்படையினருக்கான தங்குமிடம், தரங்கம்பாடி மற்றும் புதுப்பட்டினத்தில் கடலோரக் காவல் நிலையங்கள்; புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் ஆயுதப்படை நிர்வாக அலுவலகக் கட்டடம்;
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவலர்களுக்கான பாசறை, ராமேஸ்வரத்தில் சிறப்புக் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம், கமுதியில் திருப்பி நிலையம், ஆற்றங்கரை மற்றும் வாலிநோக்கம் ஆகிய இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள்; தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 50 காவலர்களுக்கான பயிற்சி அறை; திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளியில் காவலர் சமூகநலக் கூடம் மற்றும் 200 காவலர்களுக்கான தங்குமிடங்கள்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் சோதனைச் சாவடி; கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் காவல் துணைக்கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு; காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 100 காவலர்களுக்கான தங்குமிடம்; மதுரை மாவட்டம் மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் குடியிருப்பு; சிவகங்கை மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; அரியலூர் மாவட்டம் அரியலூரில் ஊர்க் காவல்படை அலுவலகக் கட்டடம்; தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படைக்கான நிர்வாக அலுவலகக் கட்டடம்; என 27 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 இதர காவல்துறை கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் குடியிருப்புகள்; சிறைத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகம்; கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மத்தியசிறை வளாகம்; திருச்சிராப்பள்ளி மத்தியசிறை வளாகம்; கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகம்; ஆகிய இடங்களில் 11 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 சிறைத்துறையினருக்கான அலுவலர் குடியிருப்புகள் என மொத்தம் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு தலைமைச் செயலாளர் .கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர். அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர். அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், சிறைத்துறைத் தலைவருமான . எஸ். ஜார்ஜ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான . ஆர்.சி. குடாவ்லா, தமிழ்நாடு காலவர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . முகமது ஷகில் அக்தர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.