முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாகாந்தியுடன் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

18 Raj 4
சென்னை,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதரணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மோதல் வலுத்தது.

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விஜயதரணியை அவதூறாக பேசினார் என்று, அவர் தரப்பில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.அதேபோல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பிலும், பெண் நிர்வாகிகள் விஜயதரணி மீது தீண்டாமை பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்தனர்.இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க வருமாறு விஜயதரணிக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அதன் பேரில், டெல்லி சென்ற விஜயதரணி, சோனியாகாந்தியை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவரிடம், ‘‘பெண்கள் நலனில் எப்போதும் நான் உடன் இருப்பேன். அதே நேரத்தில் கட்சி நலனை கருத்தில் கொண்டு வழக்கை இருதரப்பும் வாபஸ் பெறுங்கள்’’ என்று சோனியாகாந்தி கூறினார்.

‘‘நீங்கள் சொல்வது தான் எனக்கு எல்லாமே’’ என்று கூறிய விஜயதரணி, வழக்கை வாபஸ் பெறுவதாகவும் உறுதியளித்தார். அதன்பேரில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது போலீசில் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்