முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வியாழக்கிழமை, 7 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8 (இன்று), ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான,

"ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்', "ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று வெங்கடாசலம் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுப டவுள்ளனர். ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் சட்டத்திற்கு முரணாக நடவடிக்கை எடுத்துள்ளதாகப் புகார் கூறப்பட்டு இந்த போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சனிக்கிழமை விடுமுறை என்பதால் 3 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்