முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகி நூடுல்ஸ் விவகாரம்: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 13 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் வேதிப்பொருள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து  8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நெஸ்லேயின் தயாரிப்பான மேகிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்சின் விற்பனை முடங்கியது.  மேகி நூடுல்ஸ்-க்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அப்போது மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து மீண்டும் விற்பனை செய்யலாம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து சோதனைக்கு பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. இதனையடுத்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு அனுமதி அளித்து மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும், மேகி உணவுப் பொருட்கள் மீதான தடை விலக்ககத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்சை மைசூருவில் உள்ள ஆய்வகத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை, ஜனவரி 13ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகி நூடுல்சை ஆய்வு செய்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீ்ம கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக வேதிப்பொருள் உள்ளதா அல்லது சட்டம் அனுமதித்துள்ள அளவு உள்ளதா என்று மைசூல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெளிவு படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்