முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி 2-வது முறையாக அதிகரிப்பு

சனிக்கிழமை, 16 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - பெட்ரோல் - டீசல் விலை குறைந்தது ஆனால் அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு 2-வது முறை உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல்– டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்– டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 6 வாரத்தில் நேற்று முன்தினம் 4–வது முறையாக பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 32 பைசாவும், டீசல் லிட்டருக்கு 85 பைசாவும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த 1–ந் தேதி பெட்ரோல் விலை ரூ.59.77 ஆக இருந்தது. நேற்று முன்தினம் விலை குறைக்கப்பட்ட பின்பு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.59.45 ஆக உள்ளது.

இதே போல் சென்னையில் கடந்த 1–ந் தேதி டீசல் விலை ரூ.46.25 ஆக இருந்தது. அது நேற்று 45.36 ஆக குறைந்தது.பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசாவும், டீசலுக்கு ரூ.1.83–ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.3,700 கோடி வருவாய் கிடைக்கும். பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்படுவது இது 2–வது முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்