முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விபூஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ரஜினிகாந்த் கருத்து

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2016      சினிமா
Image Unavailable

சென்னை - “பத்ம விபூஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.  மத்திய அரசு நேற்று முன் தீனம் மாலை பத்ம விருதுகளை அறிவித்தது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

“எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்