முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

47-வது ஆண்டு நினைவு நாள்: அண்ணா திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலரஞ்சலி

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்  47-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நேற்று  பேரறிஞர் அண்ணாவின்  திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுசெயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிஞர்  அண்ணா 47-வது ஆண்டு நினைவு நாளான நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள  அண்ணா நினைவிடத்தில், அ.திமு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, பா.வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, காமராஜ், மோகன்,  உள்ளிட்டவர்களும், அதிமுக அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செல்வராஜ், வக்ப்வாரியத்தலைவர் தமிழ்மகன் உசேன், இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன், தகவல் தொழிற்நுட்ப அணிசெயலாளர் அஸ்பயர் சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், சத்யா, எம்.எம்.பாபு, கே.எஸ்.சீனிவாசன், எம்.எல்.ஏக்கள் ஜெயகுமார், செந்தமிழன், ராஜலட்சுமி, ஆகியோரும்  தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர்தூவி வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா  பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, மற்றும் பல்வேறு அணிகளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்