முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் மீது சி.பி.ஐ விசாரணை: கவர்னர் ஒப்புதல்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரசை சேர்ந்த அசோக் சவான் முதல்வராக இருந்தபோது ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் நடைபெற்றது. இந்த ஊழலில் அசோக் சவானுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டு உள்ள நிலையில் அவரை சி.பி.ஐ விசாரணை செய்ய மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.வித்யாசாகர் ராவ் நேற்று ஒப்புதல் அளித்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கோலபா பகுதியில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு 31 அடுக்கு மாடி கொண்டதாகும். இந்த குடியிருப்பை அரசியல் தலைவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினர் முறைகேடாக பெற்றனர். இது குறித்த ஊழல் வெளியானது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் உறவினர்களும் குடியிருப்பு பெற்றார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.வித்யா சாகர் ராவ் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார். சதி, மோசடி, ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ம்ஆண்டு, அக்டோபர் 8ம் தேதியன்று சி.பி.ஐ இணை இயக்குனர்(மும்பை) சவான் மீது விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரினார். நீதிபதி பாட்டீல் கமிஷன் விசாரணை அறிக் கைப்படி சவான் மீது விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இணை இயக்குனர் அனுமதி கோரி இருந்தார்.

ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் வழக்கில் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனை மற்றும் உதவியை கவர்னர் கேட்டு இருந்தார். அமைச்சர்களும்சவான் மீது சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினர். இதனை தொடர்ந்து அசோக் சவான் மீது சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். அசோக் சவான் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் நான்டட் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2010ம்ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகினார். அவர் உள்பட 12 பேர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதர்ஷ் குடியிருப்பு ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கும் போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும் கட்டப்பட்டது ஆகும். அந்த குடியிருப்பில் சாதாரண மக்களும் இடம் பெறுவதற்கு அசோக் சவான் அனுமதி அளித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த ஆதர்ஷ் குடியிருப்பு தெற்கு மும்பையில் கோலபா பகுதியில் அமைந்திருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய கவர்னர் கே.சங்கரநாராயணன் காங்கிரஸ்தலைவர் அசோக் சவான் மீது சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு அனுமதி தர மறுத்தார்.இதனால் அந்த வழக் கை சி.பி.ஐ மூட வேண்டி வந்தது. சமீபத்தில் மகாராஷ்டிரா கேபினட் கவர்னருக்கு அளித்த பரிந்துரையில் அசோக் சவான் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது குறித்து, சவான் கூறுகையில், இந்த நடவடிக் கை பாஜக தலைமையிலான அரசின் பழிவாங்கும் செயல் என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago