முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிராவில் உள்ள அன்னா ஹசாரே அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் அலுவலகம் உள்ளது. அங்கு விவசாயி ஒருவர், நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் போலீசார் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த நபரின் பெயர் பாலு என்றும், நிலப்பிரச்சினை காரணமாக, அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே, “நிலப்பிரச்சினையை நீதிமன்றம் மூலம் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொள்வது, தீர்வு அல்ல” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்