Idhayam Matrimony

ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேரின் போலீஸ் காவலை நீடித்து டெல்லி கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்ட 11 பேரின் விசாரணை காவலை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அவர்கள் அனைவரும் டெல்லி மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். சிரியா மற்றும் ஈராக்கில் போராடிவரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் ஆள்சேர்ப்பு முகவர்களாக இவர்கள் இருந்துள்ள தகவல் கடந்த பத்து நாட்களாக நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இன்னும் பத்து நாட்களுக்கு விசாரணை காவலை நீட்டிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டு கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு கோரிக்கையையும் கவனித்த மாஜிஸ்திரேட், மேற்கண்ட 11 பேரின் விசாரணை காவலை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து அனுமதியளித்தார். இவர்களுடன் பிடிபட்ட மேலும் நான்கு பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்தும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்