எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விவசாயிகளை பாதிக்காத வகையில் விளைநிலங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையையொட்டி எரிவாயு குழாய் பதிக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய, தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவுடன் இணைந்து, ஒத்துழைக்குமாறு கெய்ல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக, கெய்ல் நிறுவனம், கொச்சி, கூட்டநாடு, மங்களூரு, பெங்களூருக்கு இடையே எரிவாயு குழாய் பதிக்கும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், துரித நடவடிக்கைக்கு உரியதுமான உடனடிப் பிரச்னையை தங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். எரிவாயு குழாய் பதிக்கும் தற்போதைய திட்டம், சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களுக்கும், சொத்துகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்திட்டத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் ஆபத்துகள், மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தினார். அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட 7 மாவட்ட விவசாயிகளும், தங்களது விளை நிலங்களின் வழியே எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் தற்போதைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து, மாநில அரசால் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இத்திட்டத்தால் எழக்கூடிய பிரச்னைகளை மாநில அரசு கவனமாக ஆய்வு செய்தது. 310 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தத் திட்டம், 20 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் காரணமாக, இந்த அளவிற்குள் அடங்கக்கூடிய பகுதிகளில், லட்சக்கணக்கான மாமரங்கள், பலா மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் வழியில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழ மரங்கள் வெட்டப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கெனவே ஒரு மரம் வெட்டப்பட்டால், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 மரங்களாவது நடப்பட வேண்டும் என்று தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பார்த்தால், சுமார் 12 லட்சம் மரங்கள் நடப்பட வேண்டும். இது கெய்ல் நிறுவனத்தால் இயலாதது. மேலும், இப்பாதையில் கிணறுகள், குளங்கள் தோண்டப்பட்டால், அவை விவசாயத்திற்கும், தோட்டக்கலைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பாதையில் பயன்படுத்தப்படாமல் விடப்படும் தரிசு நிலங்களால் பொருளாதார வரவு சாத்தியமற்றதாகிவிடும்.
பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்களுக்கான குழாய்கள் பதிக்கப்படுவது குறித்த 1962-ம் ஆண்டு சட்டத்தின்படி, குடியிருப்புகள், அதற்கு அருகாமையில் இருக்க வேண்டிய இடங்கள் அல்லது நிலையான கட்டடங்களுக்குப் பயன்படக்கூடிய நிலத்தைத் தோண்டி, குழாய்கள் பதிக்கக்கூடாது. இதுபோன்றே ஆந்திரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கெய்ல் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தினால் விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்கு எதிராக நிகழ்ந்த விளைவுகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மேலும், தனியார் நிலங்களில் அல்லாமல், கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், விளைநிலங்களின் வழியே எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் தற்போதைய திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலையையொட்டி எரிவாயுக் குழாய்களை பதிக்கக்கூடிய பிற வழிகளை கண்டறியுமாறு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி, கெய்ல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை வழங்கியது.
இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நிலத்தை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் மத்திய அரசின் சட்டப்படி, குழாய்கள் அமைக்கும் பாதையை தேர்வு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு மிகுந்த மதிப்பு அளிக்கிறது. அதேநேரத்தில் இதுதொடர்பாக மறுசீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 13 மத்திய சட்டங்களில் ஒன்றான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் 2013, பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டம் 1962-ன் திருத்தமாகும். இச்சட்டம் சமூக பாதிப்பு மதிப்பீட்டிற்கு விலக்கு அளிக்க வழிவகை செய்கிறது. பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டம் என்பது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வருவதல்ல. ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான குழாய்களை பதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற தொழில்நுட்ப வார்த்தை இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மிகக் குறைந்த அளவே இழப்பீடு தரப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது. எரிவாயு குழாய்களை பதிப்பதால், விவசாயிகளின் வாழ்வும், வாழ்வாதாரமும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகிறது. மேலும், எரிவாயு குழாய்கள் பதிப்பதால், அவை வெடிப்பதற்கான அபாயமும், உள்ளது. குறிப்பாக இத்திட்டத்தை செயல்படுத்தினால், அப்பகுதியில் பழங்கள் தரும் மரங்கள் நடுவது, முக்கிய பயிர்களை சாகுபடி செய்வது, அடுத்தடுத்து பழ மரங்களை நடுவது போன்றவை இயலாததாகி விடும்.
2013-ம் ஆண்டு, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தின் கீழ் வெளிப்படையான நேர்மையான இழப்பீடு வழங்கும் உரிமைகள் கொண்ட அம்சங்களுக்கு இணையாக சமூக பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளும் வகையில், 1962-ம் ஆண்டின் பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தில், குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். கெய்ல் நிறுவனத்திற்காக குழாய் அமைக்கும் பாதையை, பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் மிக குறைந்த பாதிப்பை மட்டும் உண்டாக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து இத்திட்டத்தை விரைந்து செயலாற்றுவதற்கான சிறந்த வழியென தமிழக அரசு நம்புகிறது. விவசாய நிலங்களின் வழியே குழாய்கள் பதிக்கும் இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கு, தமிழக அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. கெய்ல் நிறுவனத்தின் அதிகாரிகளையும் இக்குழுவுடன் இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தான், ஏழை விவசாயிகளின் நலன் கருதி, இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வை கண்டறிந்து, அதன்பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
இப்பிரச்சினையில் தொடர்புடைய அரசு, மத்திய அரசு என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தாங்கள் விரைந்து தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் 7 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1962, பிரிவு 3-ன் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதியிட்ட அறிவிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியாக, 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி, 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதிபின்னர் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளையும் மத்திய அரசு ரத்து செய்ய முடியும். 2013-ம் வருட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் 93-ன் படியும், பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழும், மத்திய அரசு, தனது அறிவிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு அதிகாரம் உள்ளது. எனவே அந்த அறிவிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை, மத்திய அரசின் அறிவிக்கைகளை செயல்படுத்தக்கூடாது என்று கெய்ல் நிறுவனத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். 1962-ம் ஆண்டைய பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தின் கீழ், சமூகப் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தில் வெளிப்படையான, நேர்மையான இழப்பீட்டை அளிக்கவும் உரிமை உண்டு. இதனிடையே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் கெய்ல் நிறுவனம் இடம்பெற, மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.
அதன் மூலமே, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிப்பூர்வமான இப்பிரச்சினைக்கு, அனைவரும் ஏற்கக்கூடிய, ஆக்கப்பூர்வமான வகையிலான தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன். அதுவே தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கான தீர்வினை வழங்கும். இவ்வாறு முதல்வர ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
29 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.