முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை தீர்த்தவாரியில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவண்ணாமலை தீர்த்தவாரியின் நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருவண்ணாமலை நகரம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள அய்யங்குளத்தில் கடந்த 8ம் தேதி  நடைபெற்ற  தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை நகரத்தைச்  சேர்ந்த ராஜா என்பவரின் மகன் புண்ணியக்கோடி, சீனுவாசன்  என்பவரின் மகன் வெங்கட்ராமன், சுப்பிரமணியன் என்பவரின் மகன்  மணிகண்டன், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி  வட்டம், நீலமங்கலம்  பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரின் மகன் சிவா ஆகியோர் நீரில்   மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை  அறிந்து நான் மிகவும் துயரம்  அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்வதுடன்,  அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண  நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago