முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்திறன் வைத்து அணி வீரர்களை தேர்வு செய்வது தவறு: டோனி

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

புனே - ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களின் செயல்திறன் ஒன்றை மட்டுமே வைத்து இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்வது தவறு என்று ஒருநாள் அணி கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தேர்வு குறித்து டோனி கூறுகையில் ஐ.பி.எல். செயல்திறன் வைத்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வது தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில்.,

நான் எப்போதுமே ஐ.பி.எல். என்பது புதிய திறமைகளை கண்டுபிடிப்பதற்கான தளம் என்று கூறிவருகிறேன். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக செயல்படுவர்களின் செயல்திறனை ஊள்ளூர் போட்டிகளிலும் கண்காணிக்க வேண்டும். ஐ.பி.எல். செயல்திறன் வைத்து மட்டும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வது சரியான முறையாக கருதவில்லை.” என்று தெரிவித்துள்ளார். ஐ..பி.எல். போட்டியில் புனே அணிக்காக விளையாடும் தோனி, இந்த மைதானம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்