முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்சல் குரு நினைவு தினம்: காஷ்மீரில் ரெயில் சேவை ரத்து

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் நேற்று ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி முகமது அப்சல் குருவின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நேற்று ஒரு நாள் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.  இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரெயில் சேவை நேற்று நாள் முழுவதும் தற்காலிகம் ஆக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது,  வட காஷ்மீரில் ஸ்ரீநகர்-பட்காம் மற்றும் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ரெயில் சேவை நாள் முழுவதும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.  இதேபோன்று, வட காஷ்மீரின் பட்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காஜிகண்ட் ஆகிய பகுதிகளில் இருந்து ஜம்முவின் பேணிஹல் பகுதியை நோக்கி செல்லும் ரெயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில், பந்தின் பொழுது ரெயில்களும் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தின் சொத்துகளும் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.  இந்திய பாராளுமன்றத்தின் மீது கடந்த 2001ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக  முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அப்சல் குரு டெல்லி திகார் சிறையில் பிப்ரவரி 9, 2013ம் ஆண்டில் அவனுக்கு ரகசிய முறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து காஷ்மீரில் பல்வேறு இடங்களில் வன்முறை பரவியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்