எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- நாட்டில் உள்ள முதன்மையான தொழில்மய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தொழில் மயமாதல் விரைவாக வளர்ச்சியடைய உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உணர்ந்து, "தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023" என்ற திட்டத்தை நான் தொடங்கியுள்ளதாகவும், தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ரயில் போக்குவரத்து ஒரு மிக முக்கிய அம்சமாகும். தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ரயில் போக்குவரத்து முக்கிய ஒருங்கிணைப்புப் பணியை ஆற்றி வருகிறது. 2016-17-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் யோசனைகள் குறித்து தங்களுக்கு, தெரிவிக்க விரும்புகிறேன். இவற்றை தாங்கள் ஆக்கப்பூர்வமாக பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும் ரயில்போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்யவும் 10 முக்கிய ரயில்வே திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதையை நிறைவேற்றி முடிப்பது, ஸ்ரீபெரும்புதூர்-கிண்டி சரக்கு ரயில்பாதை அமைப்பது, சென்னை-தூத்துக்குடி இடையே சரக்கு ரயில்பாதை அமைத்தல், சென்னை-மதுரை-கன்னியாகுமரி இடையே அதிவேக பயணிகள் ரயில்பாதை ஏற்படுத்துதல், மதுரையிலிருந்து கோவைக்கு அதிவேக பயணிகள் ரயில்பாதை அமைத்தல், கோவையிலிருந்து சென்னைக்கு அதிவேக பயணிகள் ரயில்பாதை ஏற்படுத்துதல், சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்பாதை ஏற்படுத்துதல், சென்னை-பெங்களூரு இடையே சரக்கு ரயில்பாதை அமைத்தல், சென்னை-ஆவடி-கூடுவாஞ்சேரி இடையே ரயில்பாதை அமைத்தல், ஆவடி மற்றுத் திருவள்ளூரில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை ரயில்பாதை அமைத்தல் ஆகிய 10 திட்டங்கள் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசும், ரயில்வே அமைச்சகமும் பங்குதாரராக இருந்து செயல்படுத்தும் 3 சிறப்பு திட்டங்களுக்கும், தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, சென்னை-தூத்துக்குடி சரக்கு ரயில்பாதை, சென்னை-மதுரை-கன்னியாகுமரி இடையே அதிவேக பயணிகள் ரயில் பாதை, மதுரை-கோயம்புத்தூர் இடையே அதிவேக பயணிகள் ரயில்பாதை ஆகிய 3 திட்டங்கள் அடங்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த 3 ரயில்பாதை திட்டங்களை நிறைவேற்ற இந்திய ரயில்வே அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு, ஏற்கெனவே கொள்கை அளவில் விருப்பம் தெரிவித்துள்ளது. இதில், மதுரை-தூத்துக்குடி தொழில் வளாகம் அமைக்கும் திட்டமும் அடங்கியுள்ளது. ரயில்வே அமைச்சகத்துடன் தமிழக அரசு இணைந்து மேற்கொள்ளும் சிறப்பு ஒத்துழைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ரயில்பாதை அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்கும் என்பதால், இதனையே, சந்தை மதிப்பீட்டு அடிப்படையில் தமிழக அரசின் பங்கு மூலதனமாக அங்கீகரிக்க வேண்டும். இதற்கு சமமான பங்குத் தொகையை ரயில்வே அமைச்சகம் பணமாகவோ அல்லது ரயில்வேக்கு சொந்தமான அல்லது மத்திய அரசு துறைகளுக்குச் சொந்தமான நிலமாகவோ வழங்கவேண்டும். பங்கு மூலதனங்கள் பணமாக இருக்குமானால், இருதரப்பும் அளிக்கும் தொகை குறித்த காலத்திற்குள் வழங்கப்பட்டு, போதிய நிதி இல்லாத காரணத்தால் ரயில்வே திட்டங்கள் காலதாமதமாகாமல் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இத்திட்டங்களை நிர்வகிக்கும் அமைப்பு, சம அளவில் இருக்க வேண்டும். அதாவது மாநில அரசுக்கும் இதில் போதுமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை தங்களுக்கு, நான் நினைவுகூறுகிறேன்.
ரயில்வே அமைச்சகம் சுற்றுக்கு விட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலில் தமிழகம் தெரிவித்த கருத்துகள் போதிய அளவில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு முன்பாக நகல் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும். எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, நியாயமான, சரிசமமான, தமிழகத்திற்கு ஏற்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக, ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துமாறு ரயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு முன் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்கென அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கப்படாததால் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மேலும், தங்களின் பார்வைக்காக இத்தகைய ரயில்வே திட்டங்களின் பட்டியல் ஒன்றை இணைத்துள்ளேன். ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு இந்த ரயில் திட்டங்களை விரைவுபடுத்த வரும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட், தமிழக ரயில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தான் நம்புகிறேன். அத்துடன் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு, இதுவரை தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை தங்களுக்கு பட்டியலிட்டுள்ளேன். அவைகள், மொரப்பூர்-தருமபுரி இடையே புதிய ரயில்பாதை, சென்னையிலிருந்து-வில்லிவாக்கம் வரை 5-வது மற்றும் 6-வது ரயில் பாதை, வில்லிவாக்கம்-காட்பாடி பிரிவில் புதிய ரயில் பாதை அமைத்தல், சிதம்பரத்தில் இருந்து அரியலூர் வழியாக ஆத்தூருக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திண்டிவனம்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதை அமைத்தல், போடிநாயக்கனூரில் இருந்து கோட்டயத்திற்கு புதிய ரயில்பாதை அமைத்தல், ரேணிகுண்டாவில் இருந்து அரக்கோணம் வரை இரட்டை ரயில்பாதை அமைத்தல், அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே 3-வது மற்றும் 4-வது ரயில்பாதைகள் அமைத்தல், ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், மயிலாடுதுறை-திருக்கடையூர்-தரங்கம்பாடி-திருநள்ளாறு-காரைக்கால் இடையே புதிய ரயில்பாதை அமைத்தல், ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் வழியே கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை அமைத்தல், காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைத்தல், காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், சேலம் நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர், அரியலூர் வழியாக காரைக்காலுக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு இரட்டை ரயில்பாதை அமைத்தல், மதுரை-போடிநாயகனூர் இடையே ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுதல், போடிநாயக்கனூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திண்டுக்கல்லில் இருந்து போடி-தேனி வழியாக குமுளி வரை புதிய ரயில்பாதை அமைத்தல், மதுரை-கன்னியாகுமரி இடையே திருநெல்வேலி, நாகர்கோவில் சந்திப்பு ஆகியவற்றில் முனைய வசதிகளுடன் மின்சார இரட்டை ரயில்பாதை அமைத்தல், சென்னையில் இருந்து சைதாப்பேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய அகல ரயில்பாதை அமைத்தல், தஞ்சாவூர்-அரியலூர் இடையே புதிய ரயில்பாதை அமைத்தல், மதுரையிலிருந்து மேலூர் வழியாக காரைக்குடிக்கு புதிய ரயில்பாதை அமைத்தல் ஆகிய 20 திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.