முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2004–ல் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா தற்கொலை தீவிரவாதி: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மும்பை - 2004–ல் குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தற்கொலை தீவிரவாதி என்று மும்பை தாக்குதல் சம்பவத்தில் அப்ரூவராக மாறிய டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.   மும்பை தாக்குதல் விவகாரத்தில் 3-வது நாளாக நேற்று வாக்குமூலம் கொடுத்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்ததாவது:- பாகிஸ்தான் உளவு அமைப்பு மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பணம் அனுப்பியதையை வெளிப்படுத்தினான். குஜராத் மாநிலத்தில் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தற்கொலை தீவிரவாதி என்றும் கூறிஉள்ளான். இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதி முஸாமில் பாத், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பழிவாங்கும் விதமாக குஜராத் மாநிலம் அக்ஷர்தம் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த வண்ணம் முஸாமில் பாத், இந்தியாவின் மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டான். 

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவரான அபு காபாவையும் எனக்கு தெரியும். பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே காபாவை நான் சந்தித்து பேசி உள்ளேன். கூட்டத்தின் போது ஹபீஸ் சயீத் மற்றும் லக்வி உடன் இருந்தனர். சாஜித் மிர் மற்றும் அபு காபா கராச்சி நகரில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மும்பை தாக்குதலை கையாண்டனர். சாஜித் மிர் லேப்-டாப்பில் அபு காபா உரையாடலை கேட்ட பின்னர்தான், அவருக்கு தாக்குதலில் தொடர்பு உள்ளது எனக்கு தெரியும். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் அபு காபாவின் உரையாடலை சாஜித் மிர் லேப்-டாப்பில் கேட்டேன். மும்பை தாக்குதல் தொடர்பான தொலைக்காட்சி பதிவுகளை ராவல்பிண்டியில் வைத்து என்னிடம் சாஜித் மிர் காட்டினார்.  அப்போது நானும், சாஜித் மிர்ரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

அபு காபா, சாஜித் மிர்ருடன் பணியாற்றினான். அபு காபாவை கடந்த 2003-ம் ஆண்டு சந்தித்து பேசினேன். தீவிரவாத பயிற்சியின் போது அபு காபா எனக்கு பயிற்சி அளித்தார். மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அபு காபாவின் மருமகனும் அடங்குவான் என்று டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்து உள்ளான். தொடர்ந்து லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் தனி கடற்படை பிரிவை கொண்டு உள்ளது என்பதையும் உறுதி செய்து உள்ளான்.  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு தனி கடற்படை பிரிவு உள்ளது, தீவிரவாத இயக்கத்தின் கடற்பகுதி செயல்பாட்டிற்கு மொகத் யாகூப் தலைவர் என்று எனக்கு தெரியும்.

கடந்த 2003-ம் ஆண்டு, யாகூப்பிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை கொண்டு செல்லும் படகுகள் தொடர்பாக அவரிடம் ஆலோசித்தேன், மும்பையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு பெரும் ஆலோசனையானது நடத்தப்பட்டது.  லாகூரை சேர்ந்த தொழில் அதிபர் ஹாஜி அஷ்ராப் என்பவரையும் தெரியும். அவர்தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிதிபிரிவு தலைவர் என்று டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்து உள்ளான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்