முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில், இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து சாத்தனூர் இடது மற்றும் வலது புறக் கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் பகுதிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கும்
இன்று  முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்