எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடி நேரடியாக அறிவுறுத்த வேண்டியும், 10-2-2016 அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் 2 மீன்பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரி மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் போது அவர்களை தடை செய்வதும், கைது செய்யும் நடவடிக்கையையும் இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
இது துரதிர்ஷ்டவசமானது. இந்த கைது நடவடிக்கைள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 10-2-2016அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் இரு எந்திர படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களை 11-2-2016 அன்று தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை கைது செய்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றது. பாக்ஜல சந்தியில் பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை தமழக அரசு முழுமையாக ஆதரித்து வருகிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரிய நீர் எல்லையில் மீன் பிடிப்பதை இலங்கை கடற்படை தொடர்ந்து தடுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கைது செய்து தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. இதுபோன்ற இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய அரசின் முயற்சிகள் மூலம் நிறுத்த வேண்டும். மீனவர்களுடன் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினர், மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது படகுகளை விடுவிப்பது இல்லை. இதனால் பல மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
படகுகளை நீண்ட காலம் வைத்திருத்தல், அதனை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்தல் காரணமாக அந்த படகுகள் பருவ மழையில் சேதமடைந்துள்ளன. இந்த படகுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகும். அந்த படகுகளை மீட்டு புதுப்பித்து அதனை இந்திய அரசு விரைவில் தர வேண்டும். சர்வதேச கடல்சார் எல்லை கோடு (ஐ.எம்.பி.எல்) பிரச்சினை இந்திய சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நான் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
தமிழக அரசும் இதில், தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டுள்ளது. நமது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு ரூ.30 லட்சம் மானியத்தை அளிக்கும் திட்டத்தை எனதுஅரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் ரூ.1520 கோடி நிதி உதவியை கேட்டுள்ளேன். மேலும் அந்த உள்கட்டமைப்பை பராமரிக்க ஆண்டுதோறும் ரூ.10 கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். தமிழக அரசின் இந்த கருத்துவிற்கு விரைவில் மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூழ்ந்துள்ள துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசிடம் பேசி நடவடிக் கை எடுப்பதற்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டுகிறேன். தற்போது (10-2-2016)இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்கள் மற்றும் 2 மீன் பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.