முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

அலகாபத் - பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலரான சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹெட்லி அப்ரூவராக மாறி அமெரிக்க சிறையில் இருந்தவாறே திங்கள் கிழமை முதல்  வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வரும் டேவிட் ஹெட்லி, நேற்று 6-வது நாளாக  நடைபெற்ற விசாரணையின் போது, பல பரபரப்பு தகவல்களை அளித்தார். இந்தியாவில் தீவிரவாத செயல்களை  அரங்கேற்ற பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஈடுபட்டதையும் அவரது வாக்கு மூலம் அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், டேவிட் ஹெட்லியின் வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. டேவிட் ஹெட்லியின் இந்த வாக்கு மூலம்   பாகிஸ்தான் மீது எப்போதும் நிலவி வந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களை பயன்படுத்தி உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த தகவலை பாஜகவின் தேசிய செயலரான சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்