முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்தது சமாஜ்வாடி

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ - உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கட்சி மேலிடம் ரத்து செய்துள்ளது. சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராம்பால் யாதவ், மகேந்திர சிங் என்ற ஜீன் பாபு, மனிஷ் ராவத், ராதே ஷியாம் ஜெய்ஸ்வால், அனுப் குப்தா, ருச்சி வீரா ஆகிய 6 பேர் கடந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தலின்போது கட்சி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தற்போது 5 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் அறிவித்துள்ளார். ஆறாவது எம்.எல்.ஏ.வான ருச்சி வீரா மீதான நடவடிக்கையை ரத்து செய்வது தொடர்பான முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்